For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்

மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது. பரபரப்பான லீக் ஆட்டத்தில், லக்னோ அணியுடன் கொல்கத்தா பலப்பரீட்சை நடத்தியது.

20 ஓவர் போட்டிக்கு என்ற உரிய பரபரப்பும், திருப்புங்கள் நிறைந்த போட்டியாக இது அமைந்தது. சொல்லபோனால் ஐபிஎல் தொடரிலேயே சிறந்த போட்டியாக இது கருதப்படும்.

Recommended Video

KKR vs LSG கடைசி பந்து வரை பரபரப்பு Lucknow Qualify For Playoffs | #Cricket

இந்த போட்டியில் மொத்தம் 418 ரன்கள் விளாசப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டி காக் சதம்

டி காக் சதம்

ஆட்டம் தொடங்கியதும் இருவரும் விக்கெட்டை இழந்து விடக் கூடாது என்ற நோக்கில் பொறுமையாக விளையாடினர். 7.2வது ஓவரில் தான் லக்னோ அணியின் ஸ்கோரே 50 ரன்களை தொட்டது. அதன் பின்னர், சிக்சா, பவுண்டரி என விராட்டிய டி காக் 36 பந்தில் அரைசதம் அடிக்க, மறுபுறம் பொறுமையாக ஆடிய ராகுல் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 12.4வது ஓவரில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. சிக்சர் சிக்கசராக பறக்கவிட்ட குயின்டன் டி காக் 59 பந்துகளில் சதம் விளாசினார்.

லக்னோ சாதனை

லக்னோ சாதனை

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் திணறினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற குயின்டன் டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரியும், 10 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் கெயில், மெக்குல்லம்க்கு பிறகு அடித்த தனநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர் என்ற பெருமையை டி காக் படைத்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் அடித்தது.

ஸ்ரேயாஸ் அரைசதம்

ஸ்ரேயாஸ் அரைசதம்

கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட்டாக, ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. தோமர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் பின்னர் நிதிஷ் ரானா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். ரானா 22 பந்துகளில் 42 ரன்களும், ஸ்ரேயாஸ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தும் அடுத்தடுத்து வெளியேறினர்.

ரிங்கு அசத்தல்

ரிங்கு அசத்தல்

பில்லிங்ஸ் 36 ரன்கள் எடுக்க, ரஸில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி அவ்வளவு தான் என எதிர்பார்த்த நிலையில் ரிங்கு சிங் , சுனில் நரைன ஜோடி கடுமையாக போராடி, கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட. ஒவ்வொரு ஓவரிலும் 2 சிக்சர்களை 2 ஜோடி பறக்கவிட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டோனிஸ் வீசினார்.

பரபரப்பான கடைசி ஓவர்

பரபரப்பான கடைசி ஓவர்

முதல் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்ட ரிங்கு சிங், அடுத்த 2 பந்துகளிலும் சிக்சருக்கு விராட்டினார். இதனால் 3 பந்துக்கு 5 ரன்கள் தான் தேவைப்பட்டது. அப்போது ஒரு டபுள்ஸ் ஓட, 2 பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரிங்கு சிங் தூக்கி அடிக்க, அதனை எல்லை கோட்டிலிருந்து ஓடி வந்த எவன் லீவிஸ் ஒற்றை கையில் கேட்ச்சை பிடித்தார். இதனால் ஆட்டமே மாறியது. கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட உமேஷ் யாதவ் போல்ட் ஆனார். இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, May 19, 2022, 0:03 [IST]
Other articles published on May 19, 2022
English summary
IPL 2022 – Lucknow Beat KKR in a seat edge thrilling final over கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X