For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே கையில் லக்னோவின் விதி.. ப்ளே ஆஃப்-ல் இப்படி ஒரு விஷயமா?.. குழப்பத்தில் ஆழ்ந்த கே.எல்.ராகுல்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையில் தான் லக்னோ அணியின் விதி சிக்கியுள்ளது.

மார்ச் 27ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்! ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!

அனைத்து அணிகளும் தங்களது கடைசி போட்டியில் விளையாடி ப்ளே ஆஃப் ரேஸில் மோதி வருகின்றன.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

தற்போது வரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளை பெற்று முதலிடத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக உள்ளது. இன்னும் 4 லீக் போட்டிகளே மீதமுள்ள சூழலில் மற்ற 3 இடங்களும் இன்னும் உறுதி செய்யப்படாமல் தான் உள்ளது.

குழப்பத்தில் லக்னோ

குழப்பத்தில் லக்னோ

லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டனர். ஆனால் யாருக்கு 2வது இடம் என்பதில் தான் குழப்பம் போட்டி நிலவி வருகிறது. லக்னோ 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் மீதம் ஒரே ஒரு போட்டியுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி 2வது இடத்தை பிடித்துவிடும். எனவே அதில் தோற்குமா என லக்னோ எதிர்பார்த்துள்ளது.

சிஎஸ்கே கையில் உள்ளது

சிஎஸ்கே கையில் உள்ளது

இந்நிலையில் லக்னோவின் விதியை தீர்மானிக்கப்போவது சிஎஸ்கே அணி தான். ஏனென்றால் ராஜஸ்தான் அணி அடுத்ததாக மோதவுள்ளது சிஎஸ்கேவுக்கு எதிராக தான். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துவிடக்கூடாது என தீர்மானமாக உள்ள சிஎஸ்கே, வெற்றி பெற கடும் முணைப்பு காட்டுகிறது. அதே சமயம் ராஜஸ்தானும் நல்ல ஃபார்மில் உள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தனி சலுகை உண்டு. அதாவது ப்ளே ஆஃப் சுற்றில் முதல் குவாலிஃபையர் போட்டியில் தோற்றாலும் கூட இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே 3வது இடத்தை பிடித்தால் நேரடியாக வெளியேறிவிட வேண்டிய சூழல் தான் இருக்கும். எனவே இதற்காக தான் லக்னோ போராடுகிறது.

Story first published: Thursday, May 19, 2022, 18:43 [IST]
Other articles published on May 19, 2022
English summary
Lucknoe top 2 entry in CSK hands ( சிஎஸ்கேவின் கையில் லக்னோவின் விதி ) ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் லக்னோவின் விதியை தீர்மானிக்கப்போவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X