சொதப்பிய சிஎஸ்கே
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு இந்த முறையும் சொதப்பல் தான் இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் 2 ரன்களுக்கும், டெவோன் கான்வே 16 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த மொயீன் அலி, நிதானமாக விளையாடிய போதும், ஜகதீசன் (1), அம்பத்தி ராயுடு (3) என பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் வெளியேறினர்.
மொயீன் காட்டிய அதிரடி
சிஎஸ்கே அணி சரிந்துவிட்டது என நினைத்த போது, மொயீன் அலி தனது கியரை மாற்றினார். ராஜஸ்தானின் ஓவ்வொரு பந்தையும் நாளாபுறமும் சிதறடித்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்த போதும், மொயீன் அலி 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும் அவரை ராஜஸ்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை.
தோனி காட்டிய பொறுமை
தோனி மறுமுணையில் நின்று பார்ட்னர்ஷிப் கொடுக்க, மறுமுணையில் சுந்திரமாக மொயீன் அலி அதிரடி காட்டினார். 57 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 93 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 150 ரன்களை குவித்தது.
குவியும் விமர்சனங்கள்
இந்நிலையில் இதற்கு விமர்சனங்கள் தான் எழுந்து வருகிறது. கடந்தாண்டு சிஎஸ்கேவின் தூணாக இருந்த மொயீன் அலி இந்தாண்டும் தொடக்கத்தில் இருந்தே இதனை செய்திருந்தால் சென்னை அணி அபார வெற்றி பெற்றிருக்கும். ஆனால் கடைசி போட்டியில் இந்த ஃபார்மில் வந்து என்ன பயன்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு ? என விமர்சித்து வருகின்றனர்.