மும்பை: ஐபிஎல் 64வது லீக் ஆட்டத்தில், டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் வெற்றி பெறும் அணி 4வது இடத்துக்கு செல்லும் என்பதால் கடும் போட்டி நிலவியது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது.
இதனையடுத்து சர்பிராஸ் கான், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பாரிஸ்டோ 15 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பானுகா ராஜபக்சே மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் விளையாடினர். எனினும் இருவரும் கொஞ்சம் பதற்றத்துடன் விளையாடினர்.
அப்போது 4.4வது ஓவரில் தான் ஒரு காமெடி நிகழ்ந்தது. லலித் யாதவ் வீசிய அந்த பந்தில் தவான் அடிக்க அந்த பந்தை லலித் யாதவ் ஓடி சென்று பிடித்தார். ஆனால் அதற்கு தவான் எதிர்முனைக்கு ஓடி வந்தார். தவான் வந்ததை கவனிக்காத ராஜபக்சா பந்து எங்கே சென்றது என்பதை மட்டும் பார்த்தார்.
அப்போது, தவான் அவுட்டானது உறுதி என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தான் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்தது லலித் யாதவ் பந்தை தவறாக தூக்கி எறிய அதனை ரிஷப் பண்ட் பிடிக்கவில்லை. இதனை பயன்படுத்தி கொண்டு ராஜபக்சே மறு பக்கம் ஓடினார்.