ராஜஸ்தான் வெற்றி
ஆர்சிபி அணியுடனான வெற்றிக்கு முக்கிய காரணம் ஜாஸ் பட்லர் தான். 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 21 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள், தேவ்தத் பட்டிக்கல் 9 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றினர். எனினும் பொறுப்புடன் ஆடிய ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்களை குவித்து வெற்றியடைய செய்தார்.
ஜாஸ் பட்லரின் அதிரடி
இந்நிலையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லரை தனது 2வது கணவராக ஏற்றுக்கொள்வதாக தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டசன் மனைவி கூறியது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. ஜாஸ் பட்லர் ஒவ்வொரு முறையும் சிக்ஸர்களை அடிக்கும் போதெல்லாம், மைதானத்தில் வாண்டர் டுசனின் மனைவி லாரா துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடுவார். அவரின் கூச்சல்கள் தொலைக்காட்சிகளில் நேரலையில் பதிவானது.
லாராவின் பேச்சு
இதனால் ஜாஸ் பட்லரின் மனைவி லாரா தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இந்த சூழலில் தான் லாரா பேசியுள்ளார். அதில், ஜாஸ் பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் வாண்டர் டுசனின் மனைவி. ஆனால் நான் தான் அந்த லூசி என ரசிகர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். தற்போது பட்லர் எனது 2வது கணவர் போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் லூசியை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட இல்லை எனக் கூறியுள்ளார்.
தவறுக்கான காரணம் என்ன
கேமிராவில் அடிக்கடி பார்த்ததால் ரசிகர்கள் குழம்பி உள்ளனர். சாஹலின் மனைவி தனஸ்ரீ மற்றும் லாரா இருவரும் ஒன்றாக அமர்ந்து தான் போட்டியை பார்ப்பார்கள். அப்போது இருவருமே உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர். அப்படி ஒருமுறை லாரா துள்ளி குதித்தது முதல் தவறுதலாக கருதப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் அணியால் ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்ட லூசி வாண்டர் டுசன் 2 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.