சென்னை அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் கேப்டன் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் எம்.எஸ்.தோனி தான் இருப்பார் என உரிமையாளர் காசி விஸ்வநாதன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் அவருக்கு ரூ. 16 கோடி ஊதியமாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட வேண்டியிருந்தது.
திடீர் மாற்றம்
இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணி வெளியிட்ட அறிவிப்பில் தொடக்கமே ட்விஸ்ட் காத்திருந்தது. அதாவது தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது. தோனி 2வது வீரராக தேர்வு செய்யப்பட்டு ரூ.12 கோடி மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது. தோனி சம்பளம் குறைக்கப்பட்டதற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என அனைவரும் கேட்டு வருகின்றனர்.
காரணம் என்ன?
தோனிக்கு வயதாகிவிட்டதால், அடுத்தாண்டு நிச்சயம் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல சென்னையில் தான் கடைசி போட்டி இருக்கும் என தெரிவித்துவிட்டார். இதனால் அவருக்கு பின்னர் ஜடேஜா தான் அணியை வழிநடத்த அதிக வாய்ப்பு இருப்பதால், அவரை ரூ. 16 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தோனியே தன்னை தக்கவைக்க வேண்டாம் என்று தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்துள்ளார்.
தோனியின் கோரிக்கை
அதாவது சிஎஸ்கே அணியின் ஆலோசனை கூட்டத்தில், தோனி ரூ.16 கோடி செலவு செய்து தக்கவைக்காதீர்கள், அணியின் நலனை கருத்தில் கொண்டு தன்னை ஏலத்தில் விடுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு உடன்படாத சென்னை அணி சம்பளத்தை குறைத்து மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் தோனியின் நல்ல மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.