ராயுடு அறிவிப்பு
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் மற்றொரு சீனியரான அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக டிவிட்டரில் அறிவித்தார். 13 ஆண்டுகளாக இரு பெரிய அணிகளான மும்பை மற்றும் சிஎஸ்கே வில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் ராயுடுவுக்கு பிரயா விடை அளித்து வந்தனர்.
நிராகரித்த சிஎஸ்கே
பின்னர், ஓய்வு குறித்து வெளியிட்ட டிவிட்டை ராயுடு நீக்கிவிட்டார். இதனால் ராயுடு உண்மையிலேயே ஓய்வு பெற்றாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என ரசிகர்கள் குழம்பினர். அப்போது சிஎஸ்கே அணியின் சி.ஆ.ஓ. காசி விஸ்வநாதன், ராயுடு ஓய்வு பெறவில்லை. அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் தான் விளையாட உள்ளார் என தெரிவித்தார்.
சின்னப்பிள்ளை தனமா?
ராயுடு கடந்த சில போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற விரக்தியில் ஓய்வு முடிவை அறிவித்திருப்பார். இது மனதளவில் ஏற்பட்ட குழப்பத்தால் எடுத்த முடிவு என்றும் காசி விஸ்வநாதன் கூறினார். ஆனால், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறிவிட்டு, பின்னர் அந்த பதிவை நீக்கும் சின்னப்பிள்ளைத்தனமான விசயத்தை வீரர்கள் செய்வார்களா என்ன என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கேவில் பிரச்சினை
சிஎஸ்கே அணியில் பிரச்சினை இருப்பதையே இது காட்டுகிறது. சீனியர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராயுடு அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் அவரை சமாதானப்படுத்தி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கேப்டன் யார் என்ற மோதலில் எடுத்த முடிவா? இல்லை பேட்டிங்கில் சொதப்பியதற்காக தோனி திட்டியதால் ராயுடு எடுத்த முடிவா என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.