ராஜஸ்தான் அபார வெற்றி
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 178/6 ரன்களை குவித்தது. லக்னோ அணி 20 ஓவர்களில் 154 /8 ரன்களை மட்டுமே எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரியானின் கேட்ச்
இந்நிலையில் ராஜஸ்தானின் வெற்றியை விட ரியான் பராக் செய்த விஷயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 19.2 ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிக்ஸருக்கு தூக்கி விளாசினார். லாங் ஆன் திசையில் நின்றிருந்த ரியான் பராக் அட்டகாசமாக கேட்ச் பிடித்து அசத்தினார். ஆனால் கேட்ச்-ல் அம்பயருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
குசும்புத்தனம்
அந்த பந்தை நன்றாக பிடித்த பின்பும், வேண்டுமென்றே பந்தை புற்கள் வரை கீழே கொண்டு சென்றார். புற்களுக்கும், பந்திற்கும் இடைவெளி உள்ளதை அனைவருக்கும் தெரியும்படி சிரித்துக்கொண்டே காட்டினார். நடப்பு சீசனில் நடுவர்கள் அதிகளவில் தவறான முடிவுகளை கொடுக்கின்றனர். அவர்களின் முடிவுகள் ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்துவிடுகிறது. எனவே அவர்களுக்கு பதிலடி கொடுக்க தான் இப்படி செய்துள்ளார்.
கொந்தளித்த ரசிகர்கள்
எனினும் ரியான் பராக்கின் இந்த செயலால் ரசிகர்கள் சிலர் கொந்தளித்துள்ளனர். நடுவர்கள் என்னதான் தவறான முடிவை கொடுத்தாலும், ரியான் பராக் இப்படி செய்தது தவறுதான். இன்னும் கிரிக்கெட்டில் எதையுமே சாதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னர் இப்படி ஒரு செயலா என விமர்சித்து வருகின்றனர்.