ராஜினாமா
தோனியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், தோனியின் ராஜினாமா முடிவுக்கு மதிப்பளிப்பதாக கூறியுள்ளது. தோனி எந்த முடிவு எடுத்தாலும் அது சிஎஸ்கேவின் நலனுக்காக தான் இருக்கும். தோனியின் இந்த முடிவுக்கு பின் பல காரணங்கள் உள்ளன. தோனியின் ராஜினாமா முடிவை ஏற்று கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
ரெய்னா பாராட்டு
இதனிடையே, ஜடேஜா சிஎஸ்கே வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,எனது சகோதரர் ஜடேஜாவுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஜடேஜாவை தவிர அந்த பொறுப்புக்கு வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
சரியான நபர்
நாங்கள் இருவரும் ஒன்றாக தான் சிஎஸ்கே அணியில் விளையாடி வளர்ந்தோம். ஜடேஜாவின் வாழ்க்கையில் இது சிறந்த பகுதியாக இருக்கும். அனைவரின் எதிர்பார்ப்புகளை கேப்டனாக ஜடேஜா பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விசில் போடு என்று ரெய்னா பாராட்டியுள்ளார். தோனி இல்லாத நேரத்தில் ரெய்னா தான் சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
தோனி பெயர் இல்லை
இதனிடையே, சிஎஸ்கே-வின் கேப்டனாக இருந்த தோனிக்கு ரெய்னா இதுவரை ஒரு வாழ்த்து செய்தியோ, பாராட்டியோ டிவிட் போடவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனிக்கும், ரெய்னாவுக்கும் இடையே உள்ள நட்பின் விரிசல் காரணமாக தான் அவர் அப்படி செய்யவில்லை என்று தோனி ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.