ஹர்திக் பாண்டியா
அகமதாபாத் அணி, முதல் வீரராக ஹர்திக் பாண்டியாவை 15 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி தக்க வைக்கவில்லை. இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே அகமதாபாத் தட்டி தூக்கிவிட்டது. அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அண்மையில் செய்தி வெளியானது. 2018ஆம் ஆண்டு ஹர்திக்கை 11 கோடி கொடுத்து மும்பை தக்கவைத்த நிலையில் தற்போது அவருக்கு 15 கோடி கிடைத்துள்ளது
ரஷித் கான்
அகமதாபாத் அணி 2வது வீரராக ரஷித் கானை அதே 15 கோடி ரூபாய்க்கு ஓப்பதம் செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி 9 கோடி ரூபாய் கொடுத்து 2018ஆம் ஆண்டு ரஷித் கானை வாங்கியது. அந்த அணிக்காக 76 போட்டியில் இடம்பெற்றிருந்த ரஷித் கான், 93 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் ஐதராபாத் அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது ஏலத்திற்கு முன்பே ,அவருக்கும் முதல் வீரருக்கு வழங்கும் அதே தொகையை வழங்கி ரஷித் கானை அகமதாபாத் அணி சரிக் கட்டியுள்ளது. ரஷித் கானின் சுழற்பந்துவீச்சு, அந்த அணிக்கு பெரும் பலமாக அமையும்.
சுப்மான் கில்
அகமதாபாத் அணி 3வது வீரராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில்லை தேர்வு செய்துள்ளது.அவருக்கு 7 கோடி ரூபாயை அகமதாபாத் அணி வழங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த அவர் இனி, அகமதாபாத் அணிக்காக விளையாட உள்ளார். கொல்கத்தா அணி கில்லை 1.8 கோடி ரூபாய்க்கு 2018ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
53 கோடி
இந்தியாவை சேர்ந்த ஒரு ஆல் ரவுண்டர், ஒரு தொடக்க ஆட்டக்காரர், ஒரு வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் என பலமான தேர்வை அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 90 கோடி ரூபாயில், அந்த அணி 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதால் ஏலத்தில் அந்த அணி 53 கோடி தான் செலவு செய்ய முடியும். அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன், ஆஷிஸ் நேஹ்ரா ஆகியோர் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.