கொல்கத்தா இன்னிங்ஸ்
தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 43 ரன்கள், அஜிங்கியா ரகானே 25 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா 43 ரன்களும், ரிங்கு சிங் 23 ரன்கள் அடித்தனர். அதிரடி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் சொற் ரன்களுக்கு வெளியேறியதால் தட்டுத்தடுமாறி 165 ரன்களை சேர்த்தது.
ரோகித் விக்கெட்
166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் நடுவரால் நடந்தது. முதல் ஓவரில் சவுத்தி வீசிய கடைசி பந்து சற்று ஷார்ட் லெந்த் டெலிவெரியாக போடப்பட்டது. இதனை ரோகித் சர்மா சற்று குதித்து லெக் சைட் அடிக்க முயன்றார். அப்போது அதனை கேட்ச் பிடித்துவிட்டு, எட்ஜானதாக கூறி ஷெல்டன் ஜாக்சன் முறையிட்டார். இதற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார்.
அதிர்ச்சியை தந்த முடிவு
இதனை ரீப்ளே செய்து பார்த்த போது, பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாகவே கால் பேடில் பட்டது போன்று அல்ட்ரா எட்ஜில் தெரியவந்தது. இதனால் மும்பை ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்படி 3வது நடுவர் அந்த பந்து பேட்டில் தான் பட்டது எனக்கூறி அவுட் கொடுத்தார்.
Recommended Video
அதிர்ச்சியில் உறைந்த ரோகித்
நடுவரின் இந்த முடிவால் ரோகித் சர்மா, டக் அவுட்டில் இருந்த மும்பை அணியினர் ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். நாட் அவுட்டாக இருந்திருக்க வேண்டிய ரோகித் சர்மா வெறும் 2 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் சமூக வலைதளங்களில் அம்பயரிங் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.