கோலி சோகம்
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 236 ரன்களை தான் அடித்துள்ளார். இதில் 3 முறை டக் அவுட்டாகி தனது மோசமான ஃபார்மை காட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பாகிஸ்தான் டி20
இந்நிலையில் அவருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதன் 2வது சீசன் போட்டிகளில் பங்கேற்க விராட் கோலிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருநாட்டு அமைதிக்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன
இதுகுறித்து பேசிய தொடரின் தலைவர் ஆரிஃப் மாலிக், இந்த தொடரில் பங்கேற்க விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்பது அவருடைய விருப்பம் தான். இரு நாட்டு எல்லைப்பகுதியிலும் மிகவும் அமைதியான முறையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் தயக்கம் கொள்ள தேவையில்லை.
அமைதிக்காகவே
விராட் கோலி ஒரு சிறந்த வீரர். பாகிஸ்தானிலும் பாபர் அசாம், சாஹீன் அஃப்ரிடி போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் அமைதிக்காக நடந்தப்படும் இந்த தொடரில் அனைவரும் ஒன்று தான். ஒரே மாதிரிதான் நடத்தப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.