சிஎஸ்கேவின் தோல்வி
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக மிகக்குறைந்த ஸ்கோரை அடித்துள்ளது. இந்த 3 முறையுமே மும்பை அணிக்கு எதிராக தான் விளையாடியுள்ளது. அதுவும் இதே வான்கடே மைதானத்தில் நடந்தவை தான். 2013ம் ஆண்டு 79 ரன்கள், 2019 109 ரன்களை அடித்திருந்தது. நேற்றைய போட்டியில் தோனி மட்டும் 36 ரன்கள் அடித்து உதவாமல் இருந்திருந்தால் 97 ரன்களும் கூட வந்திருக்காது.
யுவ்ராஜ் சிங்கின் கேள்வி
இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த மோசமான தோல்விக்குறித்து முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங் பேசியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று இரவு கால்பந்து ஆட்டத்தை பார்க்க சென்றுள்ளனர். அங்கு ரெய்னாவிடன் சிஎஸ்கே 97 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டது, நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என யுவ்ராஜ் சிங் கிண்டலாக சிரித்துக்கொண்டே கேட்கிறார்?
Recommended Video
ரெய்னா பதில்
இந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சுரேஷ் ரெய்னா, அந்த போட்டியில் நான் ஆடவே இல்லையே, நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என பதிலளித்தார். ரெய்னாவின் இந்த பதில் அவர் சிஎஸ்கேவுக்கு எவ்வளவு தேவை என்பதை உணர்த்துவதாக கூறி ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
|
சிஎஸ்கே செய்த தவறு
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இதுவரை விளையாடிய 12 சீசன்களில் 2 முறை மட்டுமே லீக் சுற்றுகளிலேயே வெளியேறியுள்ளது. அந்த இரண்டு சீசனிலுமே சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவில் இல்லை. மீதமுள்ள 10 சீசன்களிலும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சுரேஷ் ரெய்னா தான் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.