எப்படி
2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வருகிறது. ஐபிஎல் என்றாலே அது அதிரடி பேட்டிங் மற்றும் பினிஷிங்குக்கு பெயர் போனது. கடைசி இரண்டு ஓவரில், ஒரு ஓவரில் முடிவை மாற்றிய பல வீரர்கள் இருக்கிறார்கள்.
பினிஷிங்
இதனால் ஐபிஎல்லில் பினிஷிங் செய்யும் வீரர்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். அந்த வகையில் தமிழக வீரர் ஷாருக்கான் இந்த தொடரில் அதிக கவனம் ஈர்ப்பார் என்கிறார்கள். தமிழக அணியில் கடந்த சில வருடங்களாக இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.
டி 20 பார்மெட்
அதிலும் டி 20 பார்மெட் போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி வெற்றிபெற இவர் முக்கிய காரணமாக இருந்தார். அதிலும் இவர் 19 பந்தில் 40 ரன்கள் அடித்தது தொடங்கி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பினிஷிங் செய்தார்.
போட்டி
எல்லா அணியிலும் தற்போது பினிஷிங் செய்ய ஆல் குறைவாக இருக்கிறார். மும்பை அணியில் மட்டுமே பொல்லார்ட், பாண்டியா போன்ற பினிஷர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாரூக்கானை மற்ற 7 அணிகளும் குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.
குறி வைக்கும்
ஏற்கனவே இவரை ராஜஸ்தான், கொல்கத்தா அணி சோதனைக்கு அழைத்துள்ளது. இன்று நடக்கும் ஏலத்தில் ஷாருக்கான் மிக அதிக தொகைக்கு செல்ல போகும் இளம் வீரராக இருப்பார். இவருக்கு அடுத்து கேரளா வீரர் அசாருதீன் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது .