கை நழுவிய வாய்ப்பு
ஈ சாலா கப் நம்தே என்று எப்போது, அந்த அணி சொல்ல தொடங்கியதோ, அப்போது ஆரம்பித்தது அந்த துரதிர்ஷ்டம். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை வந்த ஆர்சிபி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் choke ஆகி தோல்வியைத் தழுவியது. இதேபோன்று 2010ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு வந்த ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.
சென்னையிடம் தோல்வி
2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய ஆர்சிபி, மீண்டும் choke ஆகி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அடுத்த நான்கு சீசன்களில் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு வரவில்லை. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி வந்தது. ஆனால் அப்போதும் இறுதிப்போட்டிக்கு போகவில்லை.
முத்தான வாய்ப்பு
இதன்பின்னர் 2016ஆம் ஆண்டு விராட் கோலியின் அதிரடியால் ஆர்சிபி இறுதிப் போட்டி வரை வந்தது. ஆனால் ஐதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த ஆண்டு கிடைத்த அருமையான வாய்ப்பை கோட்டைவிட்டது ஆர்சிபி. இதனையடுத்து மூன்று சீசன்களில் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவே இல்லை.பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக தகுதி பெற்றது.
மீண்டும் வெளியேற்றம்
ஆனால் அப்போதும் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் போனது. இதனால் தனது கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்தார். தற்போது 2022ஆம் சீசனிலும் ஆர்சிபி பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது. இந்த முறையாவது பைனலுக்கு செல்லுமா, இல்லை பிளே ஆப் சுற்றில் மீண்டும் choke ஆகி வெளியேறிவிடுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் இதுவரை நான்காவது இடம் பிடித்த அணி கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.