ஐபிஎல் இறுதிச்சுற்று
இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான டிக்கெட் விற்பனைகள் நடந்து முடிந்து இறுதிகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பிரதமர் பங்கேற்பு
இந்நிலையில் இன்று திடீரென அகமதாபாத் நகரம் முழுவதுமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17 டிஜிபி, 4 டிஐஜி, 28 ஏசிபி, 51 இன்ஸ்பெக்டர்கள், 268 சப் இன்ஸ்பெக்டர்கள், 5000 காவலர்கள் மற்றும் 1000 துணை படை என குவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு
இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, நிறைவு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் கலக்கவுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் பிரபலங்களும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
வெற்றி யாருக்கு?
இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளது. ஏனென்றால் குஜராத் அணி தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் ஒன்றில் தோல்வியடைந்தாலும், மீண்டும் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.