நிர்வாகிகள் குழு கூட்டத்தில் முடிவு
யூஎஇயில் ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகளில் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஐபிஎல் நிர்வாகம் கோரிக்கை
முன்னதாக இம்மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் 8 ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களது பயணத்தை இம்மாதம் 20ம் தேதி மேற்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
காலஅவகாசம் வேண்டும்
கோவிட் 19 விதிமுறைகள் குறித்து ஸ்டேக்ஹோல்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, அதுகுறித்து யூஏஇ அரசு மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அணிகள் ஒரு வாரம் கழித்து தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நெறிமுறைகள்
ஐபிஎல்லின் 8 அணிகளிலும் மொத்தமாக 24 வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும். மேலும் ஒவ்வொரு அணியிலும் நெட் பௌலர்கள், பீல்டர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம். தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல வீரர்கள் விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.