குறைந்த பங்கு
தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு ஊதியமும், போட்டிகளில் வென்றால் கிடைக்கும் வருவாயில் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே கிடைத்து வந்தது. இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
வருவாயில் 20%
உதாரணமாக 100 வீரர்கள் இருப்பார்கள் என்று வைத்து கொண்டால், வருவாயில் 20 சதவீதத்தை பிரித்து.. பிசிசிஐ வீரர்களுக்குச் சரிசமமாக வழங்கும். இதுதான் நிரந்தர வருமானம்.
அதிக பங்குத்தொகை
ஆனால், இந்த வருவாயில் பங்கு தொகையை 26 சதவீதமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் பிசிசிஐயிடம் போராடினோம். அதன் பின்னர், 26 சதவீதத்தை வழங்க பிசிசிஐ முன்வந்தது. இன்று கிரிக்கெட்டைக் காட்டிலும் எந்த விளையாட்டிலும் வீரர்களுக்கு இதுபோன்ற அதிகபட்ச பங்குத்தொகை கிடைக்காது.
சச்சின், டிராவிட்
2002-ம் ஆண்டு இந்த ஊதியப் பிரச்சினை, பங்கு தொகை பிரச்சினை எழுந்தது. இன்று இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி வீரர்கள் சிறந்த ஊதியம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு சச்சின், கும்ப்ளே, டிராவிட் உள்ளிட்ட சிலரின் போராட்டமும், விடாமுற்சியும் காரணம். அவர்கள் இல்லை என்றால் கோடிக்கணக்கில் ஊதியம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று பேசினார்.