பெங்களூரு: பத்தாவது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏலம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் இர்பான் பதான், ஜாஸன் ராய் உள்ளிட்ட பல வீரர்கள் ஏலம் போகவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏலம் இன்று காலை தொடங்கியது. இதில் 357க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதிலிருந்து அனைத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சம் 76 வீரர்களை வாங்க முடியும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம்.
இன்றைய ஏலத்தில் இந்திய வீரர் இர்பான் பதானை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதேபோல மார்ட்டின் குப்தில், ஜாஸன் ராய், பெய்ஸ் பஷல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய வீரர்களும் ஏலம் போகவில்லை. எலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.