மெக்குல்லம் விலகல்
கொல்கத்தா அணியின் நீண்ட கால பயிற்சியாளராக இருந்த மெக்குல்லம் தலைமையில் அந்த அணி, அபாயகரமான அணியாகவே விளங்கியது. அதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மெக்குல்லம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, மெக்குல்லமிற்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு வந்தது.
புதிய பயிற்சியாளர்
இதனையடுத்து மெக்குல்லம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதிய பயிற்சியாளராக மத்திய பிரதேச ரஞ்சி அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட சந்திரகாந்த் பண்டிட் என்பவரை கேகேஆர் அணி தங்களது தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்தது. சந்திரகாந்த்தின் வழிகாட்டுதலின் படி மத்திய பிரதேச அணி, ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இர்பான் பதான் பாராட்டு
அப்போது, இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், சந்திரகாந்த் உள்ளூர் கிரிக்கெட்டில் மேஜிக் செய்து, சாதனை படைத்திருப்பதாக பாராட்டினார். எந்த அணியாவது, இவரை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இர்பான் பதான் சந்திரகாந்தை பாராட்டி பல மாதத்திற்கு முன் டிவிட் போட்டு இருந்தார்.
பணம் கேட்ட இர்பான்
தற்போது அந்த டிவிட்டை ஷேர் செய்த கொல்கத்தா அணி சிஇஓ வெங்கி மைசூர், இர்பான் பதான் பேச்சை தாங்கள் கவனித்து செயல்பட்டதாக குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்துள்ள இர்பான் பதான், என் ஆலோசனையை தான் நீங்கள் கேட்டு இருக்கிறிர்கள். அதற்கான உரிய பணத்தை எனக்கு வழங்க வேண்டும். என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்புகிறேன் என்று இர்பான் பதான் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவர்ந்துள்ளது.