ஓய்வு அறிவித்த இர்பான் பதான்
இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கடந்த சனிக்கிழமையன்று அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இர்பான் பதான் வரவேற்பு
இந்நிலையில் ஐசிசி அறிவித்துள்ள 4 நாட்கள் டெஸ்ட் வடிவம் முன்னேற்றத்தின் வடிவம் என்று இர்பான் பதான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோலி, சச்சின், கம்பீர் எதிர்ப்பு
5 நாட்கள் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் புதிய திட்டத்தை ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய கேப்டன் விராட்கோலி, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் கருத்து
கிரிக்கெட்டின் தூய்மையான வடிவமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளதாக தெரிவித்த முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், அதன் பாரம்பரியத்தை சிதைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
"டெஸ்ட் போட்டிகள் வழக்கொழியும்"
டெஸ்ட் போட்டிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவித்த விராட் கோலி, 4 நாட்கள், 3 நாட்கள் என்று குறைப்பதற்கு அனுமதிக்கப்பட்டால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் இல்லாமல் செய்வதற்கான வேலையும் நடக்கும் என்றும் விராட் கோலி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இர்பான் பதான் வரவேற்பு
இந்நிலையில் ஐசிசியின் இந்த 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த அறிவிப்புக்கு இர்பான் பதான் வரவேற்பு தெரிவித்துள்ளார். தான் இந்த ஆலோசனையை சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரவேற்பு பெறும் என நம்பிக்கை
ரஞ்சி கோப்பையில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டு வரவேற்பு பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளிலும் வரவேற்பு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.