பாண்ட்யாவின் ஆட்டம்
முதல் ஒருநாள் போட்டியில் சற்று மோசமாக பந்துவீசிய அவர் 70 ரன்களை வாரி வழங்கினார். பேட்டிங்கிலும் 38 பந்துகளை சந்தித்து 28 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ஆனால் 2வது போட்டியில் 2/16 மற்றும் 3வது போட்டியில் 1/37 என சிறப்பான கம்பேக்கை கொடுத்தார். அதுவும் 3வது போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசி, விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். பேட்டிங்கில் 38 பந்துகளில் 54 ரன்களை அடித்து இலக்கை அதிகரித்தார்.
இர்ஃபான் பதான் பாராட்டு
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா குறித்து இர்ஃபான் பதான் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா மிகவும் முக்கிய வீரர் ஆவார். அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையுமே செய்வது மட்டுமல்ல, சரியான பேலன்ஸை கொடுக்கிறார். இந்திய அணிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பை போன்று வேறு ஒரு வீரரை கண்டுபிடிப்பது அறிதாகும். உலகிலேயே வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.
டென்னிஸ் ஷாட்கள்
அவரின் ஷாட்களே அவரின் தரத்தை காட்டிவிடும். குறிப்பாக ஸ்ட்ரெயிட் திசையில் புல் ஷாட் ஆடுவது வியப்பாக உள்ளது. ஏனென்றால் கிரிக்கெட் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி கொண்டுள்ளார். பந்து சற்று பழையது ஆனதும் மற்ற பேட்டர்கள் திணறினார்கள். ஆனால் அவர் மட்டும் அசால்ட்டாக ஆடினார். எனவே அவர் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை தடுத்து நிறுத்துவது கடினம்.
கேப்டன் பொறுப்பு
ஹர்திக் பாண்ட்யா தற்போது ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமின்றி கேப்டன் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கை அணியுடனான டி20 தொடரை வென்றுக்கொடுத்த அவர், அடுத்ததாக நியூசிலாந்துடனான டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.