|
பந்தை வாங்கியது ஏன்
ஆனால், தொடரை இழந்த நிலையில், போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், பந்தை தோனி வாங்கிச் சென்றது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
டெஸ்டில் விளையாட மாட்டார்
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அடுத்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோனி விளையாட மாட்டார்.
|
ரசிகர்களுக்கு அதிர்ச்சி
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியோடு நாடு திரும்ப உள்ள நிலையில், தோனி பந்தை வாங்கி வந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
|
தோனி சாதனை
இதுவரை 321 ஒருதினப் போட்டிகளில், 10,046 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்தியர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். இதைத் தவிர 93 டி-20 போட்டிகளில் 1,487 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தோனி. தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பதே ரசிகர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.