உலகக்கோப்பை திட்டம்
டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாருமே டி20 அணிகளில் சேர்க்கப்படுவதே இல்லை. 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஹர்திக் தலைமையில் இளம் படை உருவாக்குவதாகவும் சீனியர்கள் இனி டி20 திட்டங்களில் இல்லை என பிசிசிஐ கூறியது. எனினும் பனிச்சுமையால் விலகியுள்ளோம், விரைவில் விளையாடுவோம் என வீரர்கள் முரண்பாடான பதிலை கொடுத்துள்ளனர்.
குழப்பங்களுக்கு முடிவு
இந்நிலையில் கேப்டன்சி குழப்பங்களுக்கான தீர்வு என்னவென்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் வரையில் சீனியர் வீரர்கள் டி20 அணிகளில் பெரும்பாலும் சேர்க்கப்படமாட்டார்கள். அவர்களாகவே ஃபேர்வெல் போட்டி போன்று விளையாடிவிட்டு ஓய்வு பெறலாம். 50 ஓவர் உலகக்கோப்பை முடிந்த பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஓய்வு அறிவிப்பு
36 வயதாகும் கேப்டன் ரோகித் சர்மா, வரவுள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு பின்னர் இந்த பொறுப்பையும் ஹர்திக் பாண்ட்யாவிடமே ஒப்படைக்கவுள்ளனர். இதற்காக தான் கே.எல்.ராகுலை துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை நியமித்தனர். ஆனால் டெஸ்ட் அணி அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
டெஸ்ட் கேப்டன்சி
3 அணியையும் கொடுத்தால் பாண்ட்யாவுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், டெஸ்ட் கேப்டன்சியை மட்டும் கே.எல்.ராகுலின் கைகளில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர். ரிஷப் பண்ட்-க்கு இன்னும் அனுபவம் தேவை என்பதால் ராகுலை தற்போதைக்கு கேப்டனாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.