பிர்மிங்ஹாம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார், இஷாந்த் சர்மா. டெஸ்ட் போட்டிகளில், எட்டாவது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினார்.
இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு, கவுன்டி போட்டிகளில் தான் பங்கேற்று விளையாடியதுதான் காரணம் என தெரிவித்துள்ளார் இஷாந்த் சர்மா. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, அதில் பங்கேற்காமல் கவுன்டி போட்டிகளில் சசக்ஸ் அணிக்காக ஆடி வந்தார் இஷாந்த். அப்போது நான்கு போட்டிகளில் 15 விக்கெட்களும், ஒரு அரைசதமும் அடித்து இருந்தார். அதன் அடிப்படையில் இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றார்.