டெல்லி : இந்திய மகளிர் அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவிற்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று இந்த விருதை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த விருதை பெறுவது தன்னுடைய கனவு என்றும் தற்போது அந்த விருதை பெற்றுள்ளதன்மூலம் தனக்கு மேலும் பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தீப்தி சர்மா கூறியுள்ளார்.
இந்த நாளுக்காக தான் காத்திருந்ததாகவும் ஆரம்பம் முதலே கடுமையாக உழைத்ததாகவும் தீப்தி மேலும் கூறினார். இதற்கு தன்னுடைய குடும்பத்தினரும் தனக்கு சிறப்பாக ஒத்துழைத்ததாகவும் தெரிவித்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, விளையாட்டுத்துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதை நேற்று ஆன்லைன் மூலம் குடியரசு தலைவர் கைகளால் பெற்றுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தீப்தி சர்மா, அர்ஜூனா விருது பெறுவது தன்னுடைய கனவு என்றும் இதற்காக தான் ஆரம்பம் முதலே கடுமையாக உழைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த நாளுக்காக தான் காத்திருந்ததாகவும் தெரிவித்த தீப்தி சர்மா, தன்னுடைய குடும்பத்தினரும் தனக்கு சிறப்பான ஒத்துழைப்பை அளித்ததாகவும் கூறியுள்ளார். இந்த விருதை பெற்றதன்மூலம் தன்னுடைய பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் தீப்தி கூறினார். இந்திய மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, இதுவரை 54 ஒருநாள் போட்டிகளிலும் 48 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.