அதிரடி ரிஷப் பந்த்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கை வெளிப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பந்த்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக அமைந்தது.
ரிஷப் பந்த்தே வித்தியாசம்
அடுத்தடுத்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறைவான ரன்களில் அவுட்டான நிலையில் அவர் ஷிகர் தவானுடன் இணைந்து ஆடி 78 ரன்களை அதிரடியாக அடித்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டு சென்றார். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் ரிஷப் பந்த் மட்டும்தான் என்று இன்சமாம் பாராட்டியுள்ளார்.
தற்போது ரிஷப்
மேலும் கடந்த 70களில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்ற அணிகளில் இருந்து வித்தியாசப்பட விவியன் ரிச்சர்ட்ஸ் காரணமாக இருந்தது போல இப்போது ரிஷப் பந்த் சிறப்பான வீரராக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கடந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் சிறப்பாக ஆடியதையும் இன்சமாம் சுட்டிக் காட்டியுள்ளார்.
கேப்டனின் சிறப்பான முடிவு
அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ரிஷப்பை களமிறக்கியது கேப்டன் விராட் கோலியின் சிறப்பான முடிவு என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த நேரத்தின் நெருக்கடியை ரிஷப் பந்த் சிறப்பாக நீக்கியதாகவும் இன்சமாம் மேலும் கூறியுள்ளார்.