சில வாய்ப்புகள்
தொடக்க காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நேரத்தில் நன்றாகவே விளையாடினார். ஆனால், பின்னர் ஒரே சொதப்பல் ரகம். ஓரங்கட்டப்பட்ட ரோகித்திற்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்வதில்லை.
2018ம் ஆண்டு போட்டி
2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரகானேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருந்த ரோகித் சர்மா, சரியாக ஆடவில்லை. அவர் நீக்கப்பட்டு மீண்டும் ரகானவே அணியில் சேர்க்கப் பட்டார். அதன்பின்னர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார்.
மீண்டும் சேர்ப்பு
உள்ளே,வெளியே ஆடிக் கொண்டிருந்த ரோகித் தான் உலக கோப்பையில் அபாரமாக ஆடி 5 சதங்களை வெளுத்தார். ரோகித்தின் அபாரமான பார்மை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் முதல் டெஸ்டில் உட்கார வைக்கப்பட்டார்.
நிரூபிக்க வேண்டுகோள்
ரகானே, விஹாரி இருவருமே நல்ல பார்மில் உள்ளனர். கிங்ஸ்டன் 2வது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. இதை குறிப்பிட்டுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ரோகித் இனிமேல் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. வாய்ப்பு கிடைத்தால், அதை வீணடித்துவிடாமல் கண்டிப்பாக நன்றாக ஆடி அவரை நிரூபிக்க வேண்டும் என்றார்.
மறந்துவிட வேண்டியது தான்
ஆக மொத்தத்தில் இனி 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் இடம்பெற்றால் கடும் நெருக்கடி காத்திருக்கிறது. நன்றாக ஆடி தம்மை மீண்டும் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை எனில்.. டெஸ்ட் வாய்ப்புகளை அவர் இனி மறந்துவிட வேண்டியதுதான்.