சர்ச்சை
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் போட்ட ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வின் வீசிய 38வது ஓவரில் ஜாக் லீச் அவுட் ஆனார். லெக் குல்லியில் இருந்த புஜாராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவுட்
ஆனால் புஜாரா பந்தை சரியாக பிடித்தாரா அல்லது பந்து கீழே குத்திவிட்டதா என்ற சந்தேகம் இருந்தது. இதனால் மூன்றாவது நடுவரிடம் கள நடுவர் சோதனை செய்தார். இதில் முதல் ஆங்கிளில் பந்து கீழே குத்தியதா என்று தெரியவில்லை.
வேறு
இதனால் வேறு ஆங்கிளில் சோதனை செய்யப்பட்டது. மொத்தமாக மூன்று ஆங்கிளில் சோதனை செய்தும் பந்து கீழே குத்தியதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து வீரர்களும் இந்திய வீரர்களும் கடுமையாக குழப்பத்திற்கு உள்ளானார்கள்.
குழப்பம்
பந்து எப்படி போனது என்பது பெரிய குழப்பமாக இருந்தது. அதன்பின் பெரிய சோதனைக்கு பின் கடைசியில் ஸ்டம்பின் பின் பக்கம் இருந்த கேமரா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் பந்தை கீழே குத்தாமல் புஜாரா பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரிய குழப்பத்திற்கு பின் அந்த பாலில் விக்கெட் கொடுக்கப்பட்டது.