ஆல் ரவுண்டர்கள்
ஆனால் முக்கியமான 3 ஆல் ரவுண்டர்கள் அணியை பல தருணங்களில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். சென்னை அணியில் ஜடேஜா, கொல்கத்தாவின் ரசல், மும்பையின் ஹர்திக் பாண்டியா ஆகியோரை அதில் சொல்லலாம்.
ஜடேஜாவின் பங்கு
ஜடேஜா சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தாமல் இருந்தாலும், அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான சூழ்நிலையில் ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிறப்பான ஆட்டம்
ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜா இணைந்து எதிரணியினை குறைந்த இலக்கில் வீழ்த்தி உள்ளனர். சென்னை அணியின் சார்பாக இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை ரவீந்திர வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா சிறப்பான பேட்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அளித்திருக்கிறார். பந்துவீச்சில் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோருக்கு ஹர்திக் பாண்டியா ஆதரவாக நின்றிருக்கிறார். ஹர்திக் பாண்டியா 16 போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிரடி ரசல்
அவ்வளவு எளிதில் யாரும் மறக்கமுடியாத ஒரு வீரர் இவர். ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பு என்று சொல்லலாம். ரசல் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பவுலிங் அவருக்கு கை கொடுக்கவில்லை. 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று 510 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இவ்வருட ஐபிஎல் தொடரின் சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார்.