2வது இன்னிங்சில் இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தற்போது ஆடி வருகிறது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை நேற்றைய தினம் ஆடிய நிலையில், 178 ரன்களில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்திய அணி.
இந்தியா திணறல்
இந்நிலையில் இன்றைய தினம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 420 இலக்கை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 140 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய பந்த், புஜாரா, சுந்தர் ஆகியோரும் சொற்ப ரன்களில் மற்றும் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஜேம்ஸ் ஆன்டர்சன் சிறப்பு
நேற்றைய தினம் ஒரு ரன்னில் அவுட்டான துணை கேப்டன் ரஹானே, இன்றைய தினம் டக் அவுட் ஆகியுள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியின் ஹீரோவாக எதிரணி பௌலர் ஜேம்ஸ் ஆன்டர்சன் காணப்படுகிறார். அடுத்தடுத்து சுப்மன் கில், ரஹானே மற்றும் பந்த் என 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
4 இன்னிங்சில் 10 விக்கெட்டுகள்
38 வயதான அவர், கடந்த 4 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய தினம் அவர் ஒரு ஓவரில் டாட் பால், விக்கெட், டாட் பால், டாட் பால், விக்கெட், டாட் பால் என பௌலிங் செய்து அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளார். வயதானாலும் தன்னுடைய திறமை குறையவில்லை என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.