4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெறவுள்ளது. கடந்த 3 போட்டிகளில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 4வது போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
டி20 தொடரிலும் விலகல்
கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தனது சொந்த காரணங்களால் அடுத்து விளையாடவுள்ள 4வது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்து விளையாடப்பட உள்ள 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் அவர் விலகியுள்ளார்.
புதியவர்களுக்கு வாய்ப்பு
இந்நிலையில் வரும் 23ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ள 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய பௌலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் சக்ரவர்த்திக்கு சிக்கல்
இதனிடையே காயம் காரணமாக கடந்த 3 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அசோசியேஷனில் பயிற்சி பெற்றுவந்த வருண் சக்ரவர்த்தி அவருக்கு எடுக்கப்பட்ட பிட்னஸ் டெஸ்ட்டில் தேறாததால் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதற்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.