பெருமையான தருணம்
இதனால், பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு பெரும் கஷ்டமாக இருக்காது. இந்த நிலையில், கேப்டன் ஆன பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, இது என் வாழ்நாளில் மிக பெரிய பெருமையான தருணமாக நினைக்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது தான் என் கனவு. ஆனால் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு சந்தோசமாக இருக்கிறது.
பெரிய பின்னடைவு
இந்த செய்தியை அறிந்ததும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் அளித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டேன். ரோகித் சர்மா அணியில் இல்லாதது மிக பெரிய பின்னடைவு தான். அணியின் காம்பினேஷன் குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். பிளேயிங் லெவன் குறித்து நீங்கள் அறிய டாஸ் போடும் போது வரை காத்திருங்கள்.
தோனியின் பாடம்
இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டதற்கு முன் அவர் கேப்டனாக எந்த போட்டியிலும் செயல்படவில்லை. ஆனால் இந்தியாவின் தலைச் சிறந்த கேப்டனாக தோனி இருந்தார். தோனி, கோலி, ரோகித் எல்லாம் இந்திய கிரிக்கெட்டிற்கு அவ்வளவு பெரிய தூண்களாக இருந்துள்ளனர். அவர்களிடம் நிறைய கற்று கொண்டு இருக்கிறேன்.
பும்ரா நம்பிக்கை
கேப்டன் ஆன பிறகு எனக்கு ஏதும் மாறவில்லை. பவுராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும். என் முழு திறனை வெளிப்படுத்தி அணியை ஒருங்கிணைக்க முயற்சி செய்வேன். எங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.