டெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உடனான முத்தரப்பு டி-20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியில் அனுபவம் உள்ள சீனியர் ஜூலான் கோஸ்வாமி இடம்பெற்றுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர், வதோதராவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று நடக்க உள்ளது.