துபாய் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேகேஆர் அணி வெற்றி கொண்டுள்ளது.
பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்றைய போட்டியுடன் தொடரிலிருந்து விலகியுள்ளது.
யாருமே எதிர்பார்க்கவில்லை.. தோனி எடுத்த முடிவால் இங்கிலாந்து வரை வைரலான அந்த தமிழ் வாக்கியம்.. செம்ம
அந்த அணி சிறப்பான ஆட்டங்களை வழங்கத் தவறினாலும், அந்த அணியின் ஆல் -ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 6 பௌலர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியின் தோல்வியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2020 தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. கேகேஆருக்கு எதிரான இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி கண்டுள்ளது.
ஆனால் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய தடத்தை இந்த சீசனில் சிறப்பாக பதித்துள்ளார். 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள 6 பௌலர்களில் ஒருவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் எகானமி ரேட் 6.55. மேலும் அந்த அணிக்காக விளையாடி இதுவரை 10 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இதுகுறித்து அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாங்கள் மீண்டும் வலிமையுடன் வருவோம் என்று ஆர்ச்சர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.