125 ரன்களை மட்டும் எடுத்த சிஎஸ்கே
ஐபிஎல்லின் 37வது போட்டி அபுதாபியில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சிஎஸ்கே 125 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ராஜஸ்தான் அணி வெற்றி
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சற்றே தடுமாறினாலும், 5வதாக களமிறங்கிய அந்த அணியின் ஜோஸ் பட்லர், சிறப்பாக விளையாடி 70 ரன்களை அதிரடியாக அடித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார். இதையடுத்து அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வெற்றி கொண்டுள்ளது.
5வது இடத்திற்கு முன்னேற்றம்
போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர், தன்னுடைய அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறவும் காரணமாக அமைந்துள்ளார். இதன்மூலம் பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெற அந்த அணிக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெர்சியுடன் போஸ் கொடுத்த பட்லர்
இந்நிலையில், போட்டியின் வெற்றியை அடுத்து சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் சிஎஸ்கே ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை ஐபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எப்போதுமே எதிரணி வீரர்களாக இருந்தாலும் தன்னுடைய ஆலோசனைகளையும் நம்பிக்கையையும் அளிப்பவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.