ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியடைந்தது. இந்த ஜோடிக்கு இது 3-வது தொடர் தோல்வியாகும்.
மகளிருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டிகள் 4 பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜூவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி, தாய்லாந்து ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தாய்லாந்து ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்தது. இதன் மூலம் ஒலிம்பிக் பேட்மின்டன் தொடரில் இருந்து வெளியேறியது.
முன்னதாக நடந்த முதல் சுற்று போட்டியில் உலகின் நம்பர் 1 ஜோடியான ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ மற்றும் அயாகா டகசாகி ஜோடியிடம், இந்திய ஜோடி 15-21, 10-21 என்ற நேரடி செட் கணக்கில் தோற்றுப் போனது. அடுத்து நெதர்லாந்தின் செலினா பைக் மற்றும் மஸ்கின் ஜோடியுடன் தோல்வியை சந்தித்திருந்தது.