அதிக நிதி
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு தான் மத்திய அரசு விளையாட்டு துறைக்காக 154 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 33 கோடி ரூபாய் தான் மத்திய அரசு அளித்துள்ளது. பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் ஹரியானாவுக்கு வெறும் 36 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
கழிவறையில் உணவு
ஆனால் இந்த பணத்தை வைத்து வீரர்களுக்கு சாப்பாடு தர கூட வழியில்லாத நிலையில் இருக்கிறது உத்திரபிரதேச அரசு. உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று உள்ளது. இதில் பங்கு பெற்ற வீரர்களுக்கு போட்டி ஏற்பட்டாளர்கள் கழிவறையில் உணவு பரிமாறி இருக்கின்றனர்.
|
ரசிகர்கள் கேள்வி
வேறு வழி இல்லாத வீரர்களும் உணவை வாங்கி சென்று இருக்கின்றனர். சாப்பிடும் உணவை கழிவறையில் எல்லாம் வைத்து பரிமாறுவார்களா என்று ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படி நடந்து கொண்ட விளையாட்டு அமைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.
ஷிகர் தவான் கண்டனம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், கழிவறையில் உணவு வழங்கும் காட்சியை பார்க்கும் போது மனசு வலிக்கிறது. உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் சாதிய ரீதியில் வீரர்கள் அவமானப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.