மும்பை இந்தியன்ஸ் வெற்றி
நேற்றைய 48வது ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி 164 ரன்களை அடித்த நிலையில் அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக சேஸிங் செய்து 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 79 ரன்களை குவித்து அந்த அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
கீரன் பொல்லார்ட் பாராட்டு
ஆர்சிபி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீரன் பொல்லார்ட், அணி சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத் தந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏமாற்றத்தில் உள்ளார் -பொல்லார்ட்
அவர் தொடர்ந்து அணிக்காக சிறப்பாகவும் நிலையாகவும் விளையாடினால் அவருக்கான வெகுமதி கிடைக்கும் என்றும் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் கீரன் பொல்லார்ட் மேலும் கூறினார்.