சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்
கேகேஆர் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். அவரது தலைமையில் அணி சில வெற்றிகளையும் பெற்றது. ஆனால் இடையிலேயே அவர் தனது கேப்டன் பொறுப்பை இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனிடம் ஒப்படைக்க வேண்டி வந்தது.
குல்தீப் யாதவும் விடுவிப்பு
இதையடுத்து கேகேஆர் அணியின் வெற்றி வாய்ப்புகள் சுத்தமாக நின்றது. கார்த்திக்கையே கேப்டனாக வைத்து இருந்திருக்கலாம் என்ற விமர்சனத்தை கேகேஆர் எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த சீசனில் தற்போது தினேஷ் கார்த்திக்கை அணியிலிருந்து கேகேஆர் விடுவிக்க உள்ளதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. குல்தப் யாதவும் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
மாற்று வீரர்கள்
குல்தீப் யாதவை அணியிலிருந்து விடுவிக்கும் நிலையில், அந்த அணிக்கு ஐபிஎல் 2021 ஏலத்தை எதிர்கொள்ள 5.8 கோடி ரூபாய் கிடைக்கும். இதனிடையே, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் உள்ள டாம் பான்டன் மற்றும் நிகில் நாயக் ஆகிய வீரர்களை கொண்டு விக்கெட் கீப்பிங்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.
கேகேஆர் அணி உறுதி
கடந்த தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் தனது அதிரடியை நிரூபிக்கவில்லை. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை அணியிலிருந்து விடுவிக்கும் எண்ணமில்லை என்று கேகேஆர் அணி தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.