பாக்.வீரர்கள்
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்று விளையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு தற்போதுவரை பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில வீரர்கள் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று இந்த தொடரில் விளையாட யோசித்தனர்.
ஐபிஎல்-க்கு அழைப்பு
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தனக்கு வந்த மிகப்பெரும் வாய்ப்பை தவறவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராஃபாட் தெரிவித்துள்ளார். அவர், ஐபிஎல் 2வது சீசனில் கொல்கத்தா அணி சார்பில் ஒரு நபர் என்னை அனுகினார். அவர் என்னிடம், ஷாருக்கான் உனது ஆட்டத்தை உண்ணிப்பாக கவனித்து வருகிறார் எனக்கூறினார். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரின் ஐடி கார்டை காட்டிய பிறகும் அவரை நம்பவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தனக்கு வந்த மிகப்பெரும் வாய்ப்பை தவறவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராஃபாட் தெரிவித்துள்ளார். அவர், ஐபிஎல் 2வது சீசனில் கொல்கத்தா அணி சார்பில் ஒரு நபர் என்னை அனுகினார். அவர் என்னிடம், ஷாருக்கான் உனது ஆட்டத்தை உண்ணிப்பாக கவனித்து வருகிறார் எனக்கூறினார். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரின் ஐடி கார்டை காட்டிய பிறகும் அவரை நம்பவில்லை.
ஷாருக்கான் ஒப்பந்தம்
பிறகு இந்தியாவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் கொல்கத்தா அணி 3 வருட ஒப்பந்தம் என்னிடம் போட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அப்போதுதான் நான் அந்த நபர் தெரிவித்தது உண்மை தான் என நம்பினேன். பின்னர் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் நேரடியாக என்னை தொடர்பு கொண்டார். லண்டனுக்கு வருகை தந்து என்னிடம் ஒப்பந்தம் போட விரும்பினார்.
கே.கே.ஆர் அணி
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் ஓய்வு பெற்றதில் இருந்து அணியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்து வருகிறது. இந்தாண்டு தொடரில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.