வடு ஆறவில்லை
அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதன் வடு இன்னும் ஆறவில்லை. ரசிகர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆடும் போட்டியில் அஸ்வினை குறி வைத்து கலாய்த்து வருகின்றனர்.
|
அஸ்வின் ட்ரோல்
இணையம் முழுவதும் "அஸ்வின் ட்ரோல்" என புதிதாக ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கை துவக்கி வைத்துள்ளனர் அஸ்வினின் செயலுக்கு எதிரான ரசிகர்கள். அஸ்வின் கொல்கத்தா போட்டியில் டாஸ் வென்றதை குறிப்பிட்டு, "அஸ்வின் டாஸ் வென்ற பின் தன்னை ரன் அவுட் செய்யவில்லை என்பதால் தினேஷ் கார்த்திக் நிம்மதி அடைந்தார்" என ஒருவர் ஓட்டியுள்ளார்.
|
டாஸ் வென்று ரன் அவுட்
அதே போல, "அஸ்வின் டாஸ் வென்று ரன் அவுட் செய்ய முடிவு செய்தார்" என இன்னொரு கலாய் பதிவையும் போட்டுள்ளார்.
|
அம்பயர் ரன் அவுட்
இன்னொருவர், "அஸ்வின் அம்பயரை ரன் அவுட் செய்து விட்டார்." என பிளாஷ் செய்தி போட்டு சிரிப்பு மூட்டியுள்ளார். ஆக மொத்தத்தில் ரசிகர்கள் பலர் அஸ்வின் மேல் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பதும், அது இந்த ஐபிஎல் சீசன் முடியும் வரை ஓயப்போவதில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
விளம்பரதாரர்கள் பாதிப்பு?
அதோடு மட்டுமில்லாமல், இது பஞ்சாப் அணிக்கும் பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணியின் விளம்பரதாரர்கள் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதினால், பஞ்சாப் அணிக்கு சிக்கல் ஏற்படும்.
கேப்டன் பதவி
மேலும், ரசிகர்கள் அஸ்வின் சரியாக பௌலிங் போடக்கூடாது என போட்டிக்கு முன்னர் கூறி வரும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகிறது. மனதளவில் பஞ்சாப் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவில்லை என்பதும் அந்த அணி நிர்வாகத்தை சிந்திக்க வைக்கும். அஸ்வின் மீதான எதிர்ப்பு குறையவில்லை என்றால் அவரது கேப்டன்சி பதவி போனாலும் ஆச்சரியமில்லை.