முதல் ஒருநாள் ஆட்டம்
சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருவதால், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி உருவாக்கப்பட்டிருந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரின் கேப்டன்சியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றியை பெற்றுள்ளது.
வாய்ப்பு கிடைக்கவில்லை
கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்ட போதும், பேட்டிங்கில் தனது வாய்ப்பை இழந்துள்ளார். ஷிகர் தவானுடன் அவர் ஓப்பனிங் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறங்கினார். அவர்கள் இருவரும் சேர்ந்தே அவுட்டாகாமல் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தவறிய வாய்ப்பு
காயம் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டே விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல், ஆசிய கோப்பை தொடரில் நேரடியாக சேர்க்கப்பட்டார். அதுவும் ஓப்பனராக ரோகித் சர்மாவுடன் அவர் மட்டுமே இருக்கிறார். எனவே ஜிம்பாப்வே தொடரில் ஓப்பனராக விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.எல்.ராகுல் இருக்கிறார்.
வல்லுநர்கள் எச்சரிக்கை
ஒருவேளை கே.எல்.ராகுலால் சிறப்பாக விளையாட முடியாவிட்டால், அவருக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை அணியில் சேர்க்கப்படுவார். எனவே மீதமுள்ள 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் தனக்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுதான் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.