ராகுல் கருத்து
இதனால் போட்டியின் முதல் ஒரு மணி நேரம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும். இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பந்தவீசுவதாக அறிவித்தார். போட்டி காலையில் தொடங்குவதால், ஆடுகளம் எப்படி செயல்பட முடியும் என்று தெரியவில்லை. காயத்திலிருந்து அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இளம் வீரர்கள்
நிறைய இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்குகிறோம். அவர்களுடைய திறமையை நிரூபிக்க இது ஒரு நல்ல களம். தீபக் சாஹர் கோயத்திலிருந்து திரும்பி விளையாடுவதை அவலுடன் எதிர்பார்த்துள்ளேன் என்று கூறினார். இந்த நிலையில், இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராகுல் திரிபாதிக்கும், ஆவேஷ் கானுக்கும் வாய்பபு வழங்கவில்லை.
வினோத தேர்வு
அதற்கு பதில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் ராகுல் நடுவரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆவேண் கானுக்கும் ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக பிரசித் கிருண்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிளேயிங் லெவன்
1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, இஷான் கிஷன், 4, கேஎல் ராகுல், 5, தீபக் ஹூடா, 6, சஞ்சு சாம்சன்,7 அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, குல்தீப் யாதவ், 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா