இருவரும் வீடியோ
இருவரும் அவ்வப்போது ஏதாவது செய்து அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டுக் கொண்டுள்ளனர். இவை அனைத்துமே வைரலாகி வருகின்றன. தனது வீட்டினருடன் செலவிடும் நேரத்தையும், விராட் கோலியுடன் செலவிடும் நேரத்தையும் பெரும் பொக்கிஷமாக கருதுகிறார் அனுஷ்கா சர்மா. காரணம் இப்படிப்பட்ட ஒறு பிரேக் இப்போதைக்கு யாருக்குமே கிடைக்காது என்பதால்.
ஹேர்கட் செய்த அனுஷ்கா சர்மா
சமீபத்தில் விராட் கோலியை உட்கார வைத்து அவருக்கு அழகாக ஷேவ் செய்து ,முடி வெட்டி அழகு பார்த்தார் அனுஷ்கா சர்மா. அதேபோல தனது குடும்பத்தினருடன் விளையாடும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது விராட் கோலி ஒரு படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மட்டுமல்லாமல் அவர்களது செல்ல நாயும் இடம் பெற்றுள்ளது.
கவிதையாக ஒரு போட்டோ
விராட் கோலியின் டிவிட்டரில் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படம் ஒரு கவிதை போல உள்ளது. அதாவது தரையில் விராட் கோலி படுத்திருக்கிறார். அருகே அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு நடுவே அவர்களின் செல்ல நாய். அனுஷ்கா சர்மா நாயைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறார். அதை வாஞ்சையுடன் அணைத்துள்ளார். விராட் கோலியின் வலது கையும் நாயை அணைத்தபடி உள்ளது. ஆனால் அவரது பார்வைதான் இங்கு ஹைலைட்.
|
காதல் பார்வை
மனைவியை அப்படி ஒரு காதல் பார்வை பார்க்கிறார் விராட் கோலி. அதில் காதலும் பாசமும், அன்பும் அப்படி வழிந்தோடுகிறது. பின்னணியில் நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி.. நமைச் சேர்த்த இரவுக்கு நன்றி என்று பாட்டு மட்டும்தான் பாடலை. அப்படி ஒரு ரொமான்டிக் லுக்காக இருக்கிறது கோலியின் அந்த வாஞ்சையான பார்வை. அழகான போட்டோ மட்டுமல்ல.. அருமையான சூழலும் கூட. இப்போது இது வைரலாகி வருகிறது.