ரோகித் பேட்டி
அத்துடன் பெரும்பாலன கிரிக்கெட் ரசிகர்களின் விருப்ப அணியாகவும் இந்திய கிரிக்கெட் அணி திகழ்கிறது. இந்திய கிரிக்கெட் அணி சிறந்த அனுபவ வீரர்களை கொண்டு திகழ்கிறது. இந் நிலையில் அணி குறித்தும், தமது பொறுப்பு என்ன என்ன என்பது குறித்தும் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.
உதவியாக இருப்பேன்
அவர் கூறியிருப்பதாவது: கேப்டன் விராட் கோலிக்கு உலக கோப்பையில் உதவியாக இருப்பது தனது கடமை. கோலிக்கு துனைநின்று, அவருக்கு மிகுந்த உதவியாக இருப்பேன். இதனைதான் கடந்த சில வருடங்களாக நான் செய்து வருகிறேன்.
ஆலோசனை தருவோம்
தோனி இந்திய கேப்டனாக இருந்தபோது அவருக்கு ஆலோசனை தேவைப் பட்டால் சச்சின், சேவாக் மற்றும் மற்ற அனுபவ வீரர்களிடம் கேட்டுப் பெறுவார். தற்போது நாங்கள் இந்திய அணியில் அந்த இடத்தில் உள்ளோம். எனவே விராட் கோலிக்கு ஆலோசனை தேவைப்படும்போது வழங்குவோம் என்று கூறினார்.
மீண்டும் சோதனை
ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது. அதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.