இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கடந்த 21ம் தேதி முதல் வரும் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் ஏ அணியில் மோதிய இந்திய மகளிர், தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக ரத்து செயயப்பட்ட நிலையில், புள்ளிகள் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
|
பெருமையாக உள்ளதாக பாராட்டு
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்திய மகளிர் அணிக்கு கேப்டன் விராட் கோலி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது பெருமையாக உள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
கே.எல். ராகுல் வாழ்த்து
இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுலும் இந்திய மகளிர் அணிக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி, கோப்பையுடன் நாடு திரும்பவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
விவிஎஸ் லஷ்மன் பாராட்டு
இதனிடையே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின்மூலம் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னும் பல சாதனைகளை அவர்கள் புரிய வேண்டும் என்று ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுர் வருத்தம்
இந்நிலையில், அரையிறுதி போட்டியை விளையாட முடியாததற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று பிற்பகலில் சிட்னியில் நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. அந்தப் போட்டியிலும் மழை குறுக்கிடும் பட்சத்தில் புள்ளிகள் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.