அஸ்வின் அசத்தல்
இந்திய அணியில் கோலியை தவிர மற்ற வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறிய நிலையில் லோ ஆர்டரில் களமிறங்கிய அசத்தல் சதமடித்தார். குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்ஸுக்கு எதிராக அவர் ஆடிய விதம் அனைவரையும் வியக்கவைத்தது.
பவுலிங்
முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்புக்கு அஸ்வின் மிகப்பெரும் சவாலாக இருந்தார். மொத்தம் இரு இன்னிங்சிலும் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.
கோலியின் உரையாடல்
கோலியுடன் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த சில வருடங்களாக சில வீரர்கள் சிறப்பாக தங்களை மேம்படுத்தி மாற்றிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு இப்போட்டியில் ரஹானே, கோலி ஆகியோர் 2018ல் இங்கிலாந்துடன் சிறப்பாக செயல்பட்டதை மீண்டும் பிரதிபலித்ததாக தெரிவித்தார்.
புதிய உணர்வு
தனது பேட்டிங் குறித்து கோலியிடம் பேசிய அஸ்வின், நான் களமிறங்கும் போது எனக்கு என்ன செய்வதென்று ஒன்றுமே தோனவில்லை. எனது அனுபவத்தில் இப்படி எந்த உணர்வும் இன்றி இருந்ததில்லை. அதனால் தான் நான் உங்களிடம் ஸ்வீப் ஷாட் ஆடவா என கேட்டேன். நீங்கள் அப்போது சிறிது நேரம் எடுத்துக்கொள் என தெரிவித்திருந்தால் நான் வேறு மாறியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியிருப்பேன் என தெரிவித்தார்.