இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்க்டன் சுந்தரை கோலி பயன்படுத்தாதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்திய அணியில் தற்போது 5 பவுலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். 3 ஸ்பின் பவுலர், 2 பாஸ்ட் பவுலர்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
இந்திய அணி
இந்திய அணியின் வெற்றிக்கு இந்த புதிய காம்பினேஷன் பெரிய அளவில் உதவுகிறது. ரஹானே உருவாக்கிய இந்த முறையை தற்போது கோலியும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்திய 5 பவுலர்களை கோலி அணியில் எடுத்தாலும் 4 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
எப்படி
கடந்த போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவருக்கு கோலி 20 ஓவர் கூட கொடுக்கவில்லை. முதல் இன்னிங்சில் குல்தீப் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். இந்த நிலையில் நேற்று ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வாஷிங்க்டன் சுந்தர் ஒரு ஓவர் கூட வீசவில்லை.
சுந்தர்
சுந்தரை அணியில் எடுத்துவிட்டு அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காமல் கோலி அப்படியே ஓரம்கட்டிவிட்டார். நேற்று இந்திய அணியின் பவுலிங் நன்றாக இருந்தது. பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தது. கடைசிக்கட்டத்தில் கோலி பாஸ்ட் பவுலர்களுக்கு ஓவர் கொடுத்தார்.
அவுட்
இதனால் 80 ரன்னில் சுருள வேண்டிய இங்கிலாந்து 112 ரன்கள் வரை எடுத்தது. நேற்று சுந்தருக்கு ஓவர் கொடுத்து இருந்தால் இங்கிலாந்து இன்னும் வேகமாக ஆல் அவுட் ஆகி இருக்கும். ஆனால் இவரை அணியில் எடுத்துவிட்டு கோலி அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.
சாஸ்திரி
இதை பற்றி சாஸ்திரியும் கேள்வி எழுப்பவில்லை. ஐந்தாவது பவுலரை பயன்படுத்தவில்லை என்றால் அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும். அதற்கு பேட்ஸ்மேனையே களமிறக்கலாமே என்று கேள்வி எழுந்துள்ளது.