எப்படி
முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் கோலி பெங்களூர் அணி மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்த ஐ பிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கோலி இருக்கிறார். இதற்காக ஐபிஎல் 2021 ஏலத்தில் தரமான அணியை கோலி தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாருதீன்
கோலி தேர்வு செய்த வீரர்களில் கேரளாவை சேர்ந்த அசாருதீன் மிக முக்கியமான வீரர் ஆவார் . இளம் வீரரான அசாருதீன் கடந்த சையது முஷ்டாக் கோப்பையில் சிறப்பாக ஆடினார் . 40 பந்துகளில் இவர் அடித்த சதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
கேரளா
இந்த பிரபலத்திற்கு பின் பேட்டி அளித்த அசாருதீன்.. இந்திய அணியில் எனக்கு ஆட வேண்டும். அதேபோல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு ஆட வேண்டும்.கோலியுடன் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதை நிறைவேற்ற வேண்டும், என்று அசாருதீன் குறிப்பிட்டு இருந்தார்.
ஆசை
இந்த நிலையில் அசாருதீன் எதிர்பார்த்தது போலவே பெங்களூர் அணி இவரை ஏலம் எடுத்தது. அசாருதீனை 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. இந்த நிலையில் அசாருதீனுக்கு கோலி உடனே மெசேஜ் செய்து இருக்கிறார் .
மெசேஜ்
அவரின் நம்பரை வாங்கி கோலி மெசேஜ் செய்துள்ளார். அதில், உங்களை ஆர்சிபி குடும்பத்திற்கு வரவேற்கிறேன். நன்றாக ஆடுங்கள். சையது முஷ்டாக் கோப்பையில் உங்கள் ஆட்டம் நன்றாக இருந்தது என்று கோலி மெசேஜ் செய்து இருக்கிறார்.
ஏலம்
ஐபிஎல் ஏலம் முடிந்தவுடன் கோலி இந்த மெசேஜை அனுப்பி இருக்கிறார். இதை அசாருதீன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. நடப்பது எல்லாம் கனவு போல இருக்கிறது என்று அசாருதீன் குறிப்பிட்டு இருக்கிறார்.